Sunday, 20 May 2012

அன்பே உனக்காக ....

ஆழ் கடலின் அந்தி சூரியனின்...
வெளிச்சம்....
அலை கடலின்.....
ஓசை..
சில்லென்ற.....
காற்று....
அனைத்துமே....
இன்று.....
புதிதாய்....
ஓர்..உணர்வு....
அவள் அருகில்....
இருக்கின்றாள்....!

அறியா....வயது...
முதலே.....
அவளின்..அருகாமை....
இப்படியோர்...
உணர்வை...
தந்ததில்லை....
சிறு வயது முதல்...
சிநேகிதம்....
பழகியவர்கள்....
இன்று முதல்.....
காதலர்கள் என...
காவியம்....
படைக்க போகிறார்கள்....!

இவர்கள்...கதை...
சொல்லப் போகும்...
இக்கவிதையின்...
நாயகி.....கவிதா..
நாயகன்....கவியரசு...!

கவிதாவின் மனம் 
கவர்ந்த...
கவியரசு....
ஒரே குலத்து ...
உறவினன் அல்ல...
 தன்  தந்தையின்..
உற்ற நண்பனின்....
ஒரே மகன்....

இவர்கள்..
ஒரே நாளில்...
ஒன்றாய்..
பிறந்த....
நண்பர்கள்....
ஒருவருக்கொருவர்..
உற்ற..துணையாய்...
வளர்ந்தவர்கள்...!



 




 

Thursday, 10 May 2012



அன்புத் தோழிக்கு...
எங்கள் அணியின்...
தலைவிக்கு.....
அன்பளிப்பாய்...
அளிக்கிறோம்....
ஓர்...
அழகிய கவிதையை...!

நீல வானத்தின்...
வண்ணத் தூரிகையாம்..
வான வில்லாய்..
எங்கள் வானில்....
உதித்தீர்கள்..!

தூவானம்..
விட்டுச் செல்லும்..
தூறலாய்...

தேகம்...
வருடிச்  செல்லும்...
தென்றலாய்...

இதயம்..
தொட்டுச் செல்லும..
மெல்லிசையாய்..

காலையில்..மலர்ந்து...
மாலையில் ...உதிர்ந்து...

         வாசம் மட்டும்...
         விட்டுச் செல்லும்...
          மலர்களாய்...

          இரவை..
          விட்டுச் செல்லும்...
           சந்திரனாய்...

           பகலை..
           விட்டுச் செல்லும்...
           சூரியனாய்...

          எங்கள்...
         அன்புக்கு உரித்தாகி...
          எங்கள்..
                                                                                         அறிவை...ஆழ்ந்துணர்ந்து...
                                                                                          உங்கள்...
                                                                                         அனுபவத்தை...பகிர்ந்து...
                                                                                         எங்கள்...மனதில்..
                                                                                         உங்கள்..நினைவுகளை.
                                                                                          பதித்து விட்டுச் செல்லும்...
                                                                                          ஸ்ரீ தேவியே....

                                                                                          உங்கள்...
                                                                                         வழிகாட்டுதலுக்கு..
                                                                                         வந்தனமாய்..
                                                                                          எங்கள்..
                                                                                         அனைவரின்...
                                                                                         அன்பினையும்...சேர்த்து..
                                                                                         அன்பு மலர்களாய்...
                                                                                          சமர்ப்பிக்கின்றோம்....!








Wednesday, 9 May 2012

இறைவனின் இணைப்பு !





அம்மா...
உன் அரவணைப்பு.....
கருவறையின் கதகதப்பு !
காற்றும் கூட...
இடைபுக முடியா....
உன் அருகாமை...
என் சுவர்க்கம் !


நான்..
உருவாய் வளர...
உன் உடல் தந்தாய்..
உணவாய்..
உன் உதிரம் தந்தாய்..
என் உலகமாய்..
நீயாகினாய்...
நானாகவே..இங்கு..
நீ மாறினாய்..!

மொழி அறியா..நான்..
உன் பேச்சில்....
மயங்குகிறேன்...
உன் ஒவ்வொரு..
அசைவிலும்...
உன்னை உணர்கிறேன் !
உனக்கும் எனக்கும்..
உறவையும்...
தாண்டிய...
ஓர் உன்னதப் பிணைப்பு !
இது..
தாய்.. சேய் என்னும்...
இறைவனின் இணைப்பு !

-காயத்ரி பாலாஜி 

Friday, 20 April 2012

அன்பும் காதலும்...

உயிர் ஜனிக்கையிலே..
அன்பும் ஜனிக்கிறது...
உயிரின் முதல் அன்பு...
அன்னையிடம்!

அன்பு..
ஆழ்மனதின் அணையா விளக்கு...
அன்னை, தந்தை, அக்கம் பக்கத்தார் என..
அனைவர்க்கும் பொதுவான ஓர் உணர்வு...

இனங்கள் மாறுகின்ற தருணம்...
இனம் புரியா ஓர் உணர்வு...
காதல்!
இது விழிகள் வீசுகின்ற வலை...
வீரரையும் வீழ்த்திடும் கலை...
விளையும் பயிர்களுக்கு...
விளங்கா புதிர்!

காதல் மரிப்பதுண்டு...
காதலை உயிர்ப்பித்திருக்க..
காதலர்கள் மரிக்கிறார்கள்...
ஆனால் ...
அன்பு மரிப்பதில்லை...
அன்புக்காய் யாரும் மரிப்பதில்லை....

ஆம்..
அன்பும் காதலும் வேறுதான்...

 காதல் கண்களில் மட்டுமே நிறைந்திருக்கும்...
அன்பு இதயத்தில் என்றும் உயிர்த்திருக்கும்!


 
 -காயத்ரி பாலாஜி


Friday, 30 March 2012

தமிழனின் சரித்திரம்:

இறைவன் படைப்பினில்....
இவர்கள் ஒரு சரித்திரம்...
பிறக்கும் போதே...இவர்கள்...
இறப்புச் சான்றிதழுடன் பிறக்கிறார்கள்...
இன்றும் அகதிகளாய் தொடரும்...
இவர்கள் வாழ்க்கை....

இங்கே இவர்கள் அண்ணாந்து வானம் பார்ப்பது....
பருவ மழைக்காக அல்ல.....
பட்டாளத்தார்கள் போடும் ....
பயங்கர குண்டுகளுக்காக ..
இங்கே பூமியைத் தோண்டினால்...
நீர் ஊற்றெடுப்பதில்லை...
உதிரம் தான் ஊற்றெடுக்கும்...

இதயமில்லாதவர்களால் ...இவர்கள்..
உடலிலும்..உள்ளத்திலும் காயம் பட்டவர்கள்....
இனப் போராளிகளென இகழப்பட்டவர்கள்...

கடைசி தமிழனும் இங்கே...
புதைக்கப்பட்டாலும்....
இவர்கள் சிந்திய உதிரம்...
இன்னும் உங்கள் மண்ணிலே...
ஜீவித்திருக்கும்...!

-காயத்ரி பாலாஜி 

Tuesday, 20 March 2012

<A HREF="http://www.tripleclicks.com/11620922">
<IMG SRC="https://www.sfimg.com/Images/Banners/banner431.jpg" border="0"/ ></A>

Tuesday, 28 February 2012

யுவதிகள்...

இன்றைய யுவதிகள்...
நவீன உலகின்...எந்திரன்கள்...
அடுக்களை முதல்...
அறிவியல் வரை...
அனைத்தும் அறிந்தவர்கள்...
ஆணுக்கு நிகராய்...
அங்கம் வகிப்பவர்கள்...
சிறகுகள் முளைத்ததும்...
சிந்திக்க தொடங்கியவர்கள்...
சாதித்து காட்டினார்கள்...
சரித்திரம் படைத்தார்கள்...
பாரதி சொன்ன பாங்கு...
பண்புடன் வாழ்பவர்கள்...
அன்னையாய்
துணைவியாய்...
தோழியாய்...
அவதாரம் எடுக்கின்றார்... அழகிய தேவதைகளாய்...
அரிதாரம் பூசுகின்றார்
உங்களில் ஒருத்தியாய்...உங்களுடன் வாழ்கின்றார்.....
உணருங்கள்..
யுவனுக்கும், யுவதிக்கும்...
இனம் வேறு .. ஆனால்...
மனம் ஒன்று...!

- காயத்ரி பாலாஜி...  

Friday, 10 February 2012

முட்கள் தாங்கும் ரோஜாக்கள்:

விதைத்தது யாரென்று தெரியாமல்....
விருட்சமாய் வளர்ந்திருக்கின்றன...
எங்கள் தோட்டத்து ரோஜாக்கள்..
அரும்புகளாய் கண்டெடுத்து......
 நட்டு வைத்த ரோஜாக்கள்....
நீரூற்றி வளர்த்தது யாரோ..
நிதம் வந்து பார்ப்பவர் யாரோ...
இவை..
இயற்கையாய் மலர்ந்த ரோஜாக்கள் அல்ல..
இயற்கை தந்த ரோஜாக்கள்..
இவற்றின்  நிறங்கள் வேறு....
இனங்கள்  வேறு....
எனினும்..
முட்கள் தாங்கிய....
இதயம் மட்டும் ஒன்றாய்...
இங்கே...வேரூன்றி விட்ட...
ரோஜாக்கள்....!

-காயத்ரி பாலாஜி

Tuesday, 17 January 2012

கருவில் முள்ளாய்:


கண் விழித்து பார்க்கையில்....
கத கதப்பாய் இருந்தது என் உலகம்...
காற்றும் நீரும் நிறைந்த...
கருப்பையில் ஓர்  உருவாய் நான்...

என் வயிற்று பசி போக்க..
தொப்புள் கொடி வழியே உணவு தந்தாய்....
அன்று நான் அறியேன்.....
வாழ் நாள் முழுதும் நீ எனை பட்டினி போடுவாய் என....

எனக்கு சுவாசம் தந்த
உன் பாசம்....
வெறும் வேஷம் என்றறியேன்...

அம்மா....
உன்னிலிருந்து எனை பிரித்து விட்டாரென்று எண்ணி....
அழுகின்றேன்....
ஆயுசு முழுக்க நீ எனை விட்டு பிரிந்திருப்பாய்....
என்றறியாமல்.....

உன்னிலிருந்து பிறந்த என்னை....
பஞ்சு மெத்தையில்.....
படுக்க வைப்பாய் என்றெண்ணினேன்....

பாழும் கிணற்றிலோ...
பிளாட்பாரத்திலோ.......
குப்பை தொட்டியிலோ....
எனை வீசிவிட்டு செல்வாய்....
என அறியாமல்.....

பிறந்த நாள் அறியாமல்...
பெற்றோர் பெயர் தெரியாமல்...
யாரோ வைத்த பெயர் சூடி....
வளர்கின்றேன்......
என் எதிர்காலம் புரியாமல்....

அம்மாவின் முகமறியேன்....
எனை அரவணைத்த......
முகங்கள் என் அன்னையாய்.....
என் வளர்ச்சிக்கு......
பங்களித்தோர்....
என் தந்தையாய்.....
எனைப்போல்...இன்னும் பலர்.....
என் சகோதரர்களாய்....
வாழ்கின்றோம் ஓர் கூட்டில்....
அனாதை இல்லம் எனும் வீட்டில்....

பிறந்த குலத்தின்
பெயர் அறியோம்...ஆதலால் ..
அனாதை என்னும் அடைமொழி சூட்டி விட்டார்.....

அம்மா அன்று  உன்....
கருவினுள் நான் பூவாய்.....
இருந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
முள்ளாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
உனக்கு சுகமாய்....நான்
இருந்திருப்பேன் என்று நினைத்தேன்.....
ஆனால்....
சுமையாய் அல்லவா இருந்திருக்கிறேன்....
விருப்பின்றி....
எனை விதைத்தாய்.....
அம்மா....உன் பெயர்......
என் மனதில் முள்ளாய்....!

- காயத்ரி பாலாஜி


Thursday, 5 January 2012

அன்பும் அன்பு சார்ந்த இடமும்.....

அன்பின்றி ஓருயிரும் இயங்காது:


                                                                    அன்னையின் அன்பு குழந்தைகளிடத்தில், குழந்தைகளின் அன்பு பெற்றவரிடத்தில், ஆன்மீகவாதியின் அன்பு கடவுளிடத்தில், கடவுளின் அன்பு ஏழைகளிடத்தில், கணவனின் அன்பு மனைவியிடத்தில், இப்படி ஒருவர் மேல் இன்னொருவர் காட்டும் அன்பு பொய்யானதோ போலியானதோ அல்ல. உறவுகளிடத்தில் மட்டும் அன்பு செலுத்துவோர் சிலர். உறவுகள் அல்லாத சக மனிதர்களிடத்தில் அன்பு செலுத்துவோர் சிலர். உறவுகளால் கைவிடப்பட்டும், உறவுகள் யாரென்றே  தெரியாமலும் வாழும் மனிதரிடத்தில் அன்பு செலுத்துவோர் மிகச் சிலர். 


வள்ளுவனின் அன்பு:


ஒவ்வொருவரும்..ஒவ்வொருவரின் அன்புக்காக ஏங்குகிறோம்..."அன்புக்கு இல்லை அடைக்கும் தாழ்".. என்று வள்ளுவன் சொன்னது போல் குறிப்பிட்ட சிலரிடத்தில் மட்டும் நாம் அன்பு செலுத்துவதை மாற்றிக்கொள்ள வேண்டும். அனைவரிடத்திலும் அன்பு காட்ட பழகி விட்டால் அன்பே சிவம் என்பது போல் அன்பே உலகம் என்றாகிவிடும். 


அன்பில்லாதவர் என்று உலகில் யாருமில்லை, சந்தர்ப்பங்களும் வாழ்க்கை முறையும் அவர்களுக்கு அவ்வாறு அமைந்திருக்கலாம். சுயநலத்துடன் வாழ விரும்பினால் ஒரு சிலரிடம் மட்டுமே அன்பு செலுத்த முடியும்.  பொதுநலத்துடன் வாழ ஆரம்பித்தால் அனைவரையும் அரவணைத்து செல்லும் பக்குவம் பிறக்கும்.


சில கேள்விகள் :


கேட்கப்படாத சில கேள்விகள் , 


நமக்கு பிடித்தவர்கள், நெருக்கமானவர்களிடத்தில் காட்டும் அன்பை ஏன் அனைவரிடத்திலும் காட்டத் தவறுகிறோம்....?


அநாதை ஆசிரமத்தில், முதியோர் இல்லத்தில் ஆதரவற்று வாழும் மனிதர்களிடத்தில் சக மனிதர்களாகிய நாம் அன்பு காட்டவும், அவர்களிடத்தில் நேரத்தை செலவிடவும் ஏன் தயங்குகிறோம்..?


ஒரு கதை:


அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து நன்கு படித்த ஒரு இளைஞன் கோவிலுக்கு செல்கிறான்..
கோவில் பூசாரி கேட்கிறார், சுவாமி கிட்ட நல்லா வேண்டிக்கொள்....நீ நினைத்ததை நடத்தி தருவார் என்று.
அந்த இளைஞன் கேட்கிறான்: சுவாமி சாமி கிட்ட நான் என்ன கேட்டாலும் தர முடியுமா?
பூசாரி சொல்கிறார்: கேளப்பா..
இளைஞன்: உறவுகள் யாரென்று தெரியாமல், எங்கு பிறந்தோம், என்று பிறந்தோம் என அறியாமல் எத்தனையோ குழந்தைகள், என்னைப் போல் இளைஞர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்...


அம்மா என்று அழைக்க யாருமில்லை...
அன்பு காட்டி அரவணைக்க யாருமில்லை...
அநாதை இல்லத்தில்...
ஆதரவு காட்டுபவரின் கட்டுப்பாட்டில் வளர்கிறோம்...


அரசாங்க பள்ளிகளில் படிக்கிறோம்...
அன்று உணவு கிடைத்தால் உண்கிறோம்........
அணிந்து கொள்ள அழகான ஆடைகள் இல்லை...
அன்னை தந்தையுடன் வரும் குழந்தைகளை பார்த்து ஏங்குகிறோம்...


எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன், 
அன்னை போல் அன்பு காட்ட...
தந்தை போல் தோள் கொடுக்க..
குறைவில்லா உணவு கிடைக்க...
நோயில்லா வாழ்வு கிடைக்க...
கதை சொல்லும் பாட்டி....
விளையாட தோழர்கள்....


என எங்களுக்கும் எல்லாம் வேண்டும்.........


என்கிறான்....


பூசாரி சொல்கிறார் :


தம்பி..."தெய்வம் மனுஷ ரூபே" ......என்று சொல்வார்கள்...நம் வீடு..நம் வாழ்க்கை என்று மட்டும் வாழாமல்.....அன்புக்காக எங்கும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கும், முதியோர்களுக்கும்,  என அனைவரிடத்திலும் அன்பு காட்டும் மனிதர்கள் உருவாக வேண்டும்.....


உன் வேண்டுதல் ஒரு நாள் நிச்சயம் பலிக்கும்....என்றார்....


கதை முற்றிற்று....


ஆனால் நிஜமும் இதுதானே....


அன்புக்கு விலையில்லை.....


அன்பு காட்ட கட்டாயமில்லை.....


ஆதலால் அன்பு செய்வோம் அனைவரிடத்தில்....


அகிலம் முழுதும் மாற்றுவோம்....


அன்பும் அன்பு சார்ந்த இடமுமாக.....


காயத்ரி பாலாஜி..



Tuesday, 3 January 2012

முதல் காதல்:

அன்றொரு அந்திப் பொழுதில்...
அருகில் நீ..
அசைவற்றிருந்த என் நா..
மௌனத்தில் பல மொழிகள் பேசியது..


சிறிது தூர நடைப்பயணம்...
சில்லென்ற காற்றில்...
சுவர்க்கம் இதுவென்று...
அன்று உணர்த்தியது...


இதயத்தின் துடிப்பு..
அன்று மட்டும் ...
அதிகமாய் இருந்ததால்...
சில வார்த்தை பரிமாற்றங்கள் மட்டுமே..


ஒன்றும் அறியா..
குழந்தைகள் சந்திப்பது போல்..
அன்று நம் சந்திப்பு...


காலம் நம் காதலில் கரைந்தது...
அன்று உணர்த்தியது...
முதல் காதல்..
முதல் சந்திப்பு...
இப்படித்தான் என்று....!


காயத்ரி பாலாஜி